ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,615 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது குறித்து ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்.
புதிதாக 3,615 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,22,734-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 36,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை மொத்தமாக 1,85,700 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 17 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1181-ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.