டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

இந்தியாவில் கரோனா பாதித்த 9.44 லட்சம் பேருக்கு தீவிர சிகிச்சை 

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 லட்சத்தைக் கடந்துள்ளது. அதே சமயம், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 54 லட்சத்தைக் கடந்துள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2020, 4:39 am

DIN

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 லட்சத்தைக் கடந்துள்ளது. அதே சமயம், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 54 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 79,476 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64,73,545 - ஆக அதிகரித்தது. இதேபோன்று மேலும் 75,628 பேர் குணமடைந்ததால், கரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 54,27,707 - அதிகரித்தது. குணமடைந்தோரின் விகிதம் 83.84 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1,069 பேர் உயிரிழந்ததால், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,00,842 - ஆக அதிகரித்தது. உயிரிழந்தோரின் விகிதம் 1.56 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

தொற்று பாதிப்புக்கு அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 37,480 பேரும், கர்நாடகத்தில் 9119 பேரும், ஆந்திரத்தில் 5,900 பேரும், தில்லியில் 5,438 பேரும், கேளத்தில் 791 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் 9,44,996 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 14.60 சதவிகிதமாக உள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் ஐசிஎம்ஆா்) தகவல்படி, இதுவரை 7,78,50,403 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 11,32,675 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.