மகாராஷ்டிரம்: 24 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்களுக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 144 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 144 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதிக அளவாக மகாராஷ்டிரத்தில் ஏராளமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என முன்களப் பணியாளர்கள் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 144 காவலர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த காவலர்களின் எண்ணிக்கை 24,023-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,743 காவலர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 21,030 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 250-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...