தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டி.கே.சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. 

News image

டி.கே.சிவகுமார்

Updated On :5 அக்டோபர் 2020, 6:26 am

DIN

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. 

கர்நாடகம், தில்லி மற்றும் மும்பையில், டி.கே. சிவகுமாருக்குச் சொந்தமான 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ரூ. 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, கடந்த 2017ல் வருமான வரி சோதனையில், 8.6 கோடி ரூபாய் கணக்கில் காட்டவில்லை என்றும் மேலும் அந்த பணம் 11 கோடியாக மாற்றப்பட்டுள்ளது என்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக டி.கே.சிவகுமார் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2019 செப்டம்பர் மாதம் டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

கர்நாடகத்தில் இடைத்தேர்தலுக்கான எங்கள் தேர்தல் பணிகளை தகர்த்தெறியும் பாஜகவின் முயற்சி என சிபிஐ சோதனை குறித்து காங்கிரஸார் குற்றம் சாட்டியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.