அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சிபிஐ முன்னாள் இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை

​சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வானி குமார் சிம்லாவிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (புதன்கிழமை) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

News image
கோப்புப்படம்
Updated On :7 அக்டோபர் 2020, 5:03 pm

DIN


சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வானி குமார் சிம்லாவிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (புதன்கிழமை) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

அவரது உடல் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டதாக சிம்லா காவல் துறை கண்காணிப்பாளர் மோஹித் சாவ்லா தெரிவித்துள்ளார்.

அஸ்வானி குமார் 37 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு மற்றும் ஹிமாச்சலப் பிரதேச அரசுகளுக்காக பணியாற்றியுள்ளார். 1973-இல் ஐபிஎஸ்-இல் இணைந்த அவர் 2006 ஆகஸ்டில் ஹிமாச்சலப் பிரதேச காவல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அவர் நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.