மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு: குடியரசுத் தலைவர் இரங்கல்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய நுகர்பொருள் விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் ராம்விலாஸ் பாஸ்வான். சில தினங்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் சிகிச்சையில் இருந்த பஸ்வான் வியாழக்கிழமை புதுதில்லியில் காலமானார்.

அவரது மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்திக் குறிப்பில், “மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவின் மூலம் நாடு ஒரு தொலைநோக்கமுள்ள தலைவரை இழந்துள்ளது. பாராளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பாகவும் நீண்ட காலம் பணியாற்றிவராகவும் அவர் இருந்தார். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருந்த பாஸ்வான் அம்மக்களின் மனங்களை வென்றவர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com