சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜார்கண்டில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 5 பேர் கைது

ஜார்கண்டில் 17 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
ஜார்கண்டில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 5 பேர் கைது (கோப்புப்படம்)
Updated On :10 அக்டோபர் 2020, 5:54 am

DIN

ஜார்கண்டில் 17 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷெத்பூரில் தமது சக தோழனுடன் வந்த 17 வயது சிறுமியை கடந்த வியாழக்கிழமை 5 பேர் அடங்கிய மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளனர்.

கட்டாயப்படுத்தி காளியதி கெளசாலா பகுதிக்கு சிறுமியை கடத்திச் சென்ற அவர்கள், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். 

இதில் ஒருவன் சிறுவன் என்பதால், அவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு காவல்துறையினர் அனுப்பிவைத்தனர்.  மற்ற நான்கு பேரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.