தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகாராஷ்டிரம்: இனிப்பகத்தில் அதிகாலையில் தீ விபத்து

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் இனிப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.

News image

கோப்புப்படம்

Updated On :14 அக்டோபர் 2020, 7:03 am

DIN

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் இனிப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தின் திவா பகுதியிலுள்ள இனிப்பகம் ஒன்றில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து உடனடியாக தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

தீ விபத்து குறித்து பேசிய மண்டல பேரழிவு மேலாண்மைத் தலைவர் சந்தோஷ் கடம் கூறியதாவது, மோசமான சாலையின் காரணமாக தீயணைப்பு வாகனத்தின் ஹைட்ராலிக் பைப் உடைந்ததால், தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் கடை முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது என்று கூறினார். தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.