நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

'மத்தியப்பிரதேசத்தில் நடைபெறுவது மோசடி அரசு': கமல்நாத்

மத்தியப்பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தலைமையில் மோசடி அரசு நடைபெறுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் விமர்சித்துள்ளார்.

News image

மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்

Updated On :16 அக்டோபர் 2020, 11:39 am

DIN

மத்தியப்பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தலைமையில் மோசடி அரசு நடைபெறுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் விமர்சித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் உஜ்ஜைன் பகுதியில் போதைப்பொருளைக் குடித்து தொழிலாளர்கள் 14 பேர் உயிரிழந்தனர். இது குறித்து முன்னாள் முதல்வர் கமல்நாத் சுட்டுரையில் விமர்சித்துள்ளார். 

அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''மத்தியப்பிரதேசத்தில் சிவராஜ் சிங் செளகான் அரசு பொறுப்பேற்றதும் மதுபான மோசடி, கடத்தல் மோசடி, குற்றச்செயல்கள், நில மோசடி, போதைப்பொருள் மோசடி என அனைத்து விதமான மோசடிகளும் மீண்டும் தலைத்தூக்கத்துவங்கியுள்ளன.

மேலும், உஜ்ஜைன் பகுதியில் போதைப்பொருளைக் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில், ஜபால்பூர் பகுதியில் 12 வயது சிறுவன் கடத்தப்பட்டுள்ளார். இதனால் தற்போது குழந்தைகள் கடத்தலும் அதிகரித்துள்ளது'' என்று கமல்நாத் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.