கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கரோனா பேரிடரில் பணிக்கு வராத 432 மருத்துவப் பணியாளர்கள் நீக்கம்: கேரள அரசு அதிரடி

கரோனா பேரிடர் காலத்தில் பணிக்கு வராத 385 மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்து கேரள சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
கரோனா பேரிடரில் பணிக்கு வராத 432 மருத்துவப் பணியாளர்கள் நீக்கம்: கேரள அரசு அதிரடி
Updated On :17 அக்டோபர் 2020, 12:23 pm

DIN


திருவனந்தபுரம்: கரோனா பேரிடர் காலத்தில் பணிக்கு வராத 385 மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்து கேரள சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 432 மருத்துவப் பணியாளர்களுக்கும் பல வாய்ப்புகள் வழங்கப்பட்டன. எனினும் அவர்கள் மீண்டும் பணியில் இணைவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை எனவே சுகாதாரத் துறை ஆய்வாளர், மருந்தாளுனர், செவிலியர், உதவி செவிலியர் உள்பட நீண்ட விடுமுறையில் இருந்த அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, அறிவிப்பின்றி விடுப்பில் இருக்கும் ஊழியர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.