சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கொல்கத்தா: கரோனாவிற்கு உதவி துணை ஆய்வாளர் பலி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கரோனா வைரஸ்தொற்று காரணமாக உதவி துணை ஆய்வாளர் உயிரிழந்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :18 அக்டோபர் 2020, 10:14 am

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கரோனா வைரஸ்தொற்று காரணமாக உதவி துணை ஆய்வாளர் உயிரிழந்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மேற்குவங்கத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே கரோனா வைரஸ் தொற்றுக்கு கொல்கத்தாவில் உதவி துணை ஆய்வாளர் சித்தார்தா சேகர் உயிரிழந்தார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அவர் உயிரிழந்தார்.

கொல்கத்தாவில் கரோனா தொற்றுக்கு இதுவரை 15 காவலர்கள் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த மாதம் கொல்கத்தா ஆணையர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட உதவி துணை ஆய்வாளர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு காவல்துறை துணை நிறுகும் என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.