ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஜேடியு-க்கு விழும் ஒவ்வொரு வாக்கும் பிகார் எதிர்காலத்தை நாசமாக்கும்: சிராக் பாஸ்வான்

​ஐக்கிய ஜனதா தளத்துக்கு (ஜேடியு) விழும் ஒவ்வொரு வாக்கும் பிகாரின் ஒட்டுமொத்த எதிர்காலத்தை நாசமாக்கும் என லோக் ஜனசக்தி கட்சித் (எல்ஜேபி) தலைவர் சிராக் பாஸ்வான் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :19 அக்டோபர் 2020, 1:03 pm

DIN


ஐக்கிய ஜனதா தளத்துக்கு (ஜேடியு) விழும் ஒவ்வொரு வாக்கும் பிகாரின் ஒட்டுமொத்த எதிர்காலத்தை நாசமாக்கும் என லோக் ஜனசக்தி கட்சித் (எல்ஜேபி) தலைவர் சிராக் பாஸ்வான் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.

பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை விமரிசித்து சிராக் பாஸ்வான் மேலும் தெரிவித்ததாவது:

"நிதிஷ் குமாரின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியைப் பார்த்தாலே அடுத்த 5 ஆண்டுகளை நம்மால் நினைத்துப் பார்க்க முடியும். இப்படிப்பட்ட உதவியற்ற நிலையிலிருந்து மாநிலத்தை மீட்டெடுக்க நாம் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்."

243 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 என 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

இந்தத் தேர்தலில் ஜேடியு-க்கு எதிராக எல்ஜேபி போட்டியிடுகிறது. ஆனால், ஜேடியுவின் கூட்டணி கட்சியான பாஜக போட்டியிடும் தொகுதிகளில் எல்ஜேபி போட்டியிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.