ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சென்னை மெட்ரோ ரயிலில் ஊறுவிளைவிக்காத கிருமிநாசினி

சென்னை மெட்ரோ ரயிலில் கரோனா தடுப்புப் பணிக்காக வேதியியல் ஊறுவிளைவிக்காத கிருமிநாசினியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
சென்னை மெட்ரோ ரயிலில் ஊறுவிளைவிக்காத கிருமிநாசினி
Updated On :21 அக்டோபர் 2020, 7:13 am

DIN


சென்னை மெட்ரோ ரயிலில் கரோனா தடுப்புப் பணிக்காக வேதியியல் ஊறுவிளைவிக்காத கிருமிநாசினியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கத்துக்குப் பின்பு செப்டம்பர் 7-ம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை துவக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள் அனைத்தும் கிருமிநாசினி கொண்டு உரிய இடைவெளியில் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு தூய்மைப்படுத்தும் போது, இந்தியாவிலேயே முதன் முயற்சியாக வேதியியல் ஊறுவிளைவிக்காத நீர்வடிவிலான கிருமிநாசினியை பயன்படுத்துகிறது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிஏ நுட்பம் மூலம் வெளிப்படும் பிராணவாயு கலந்த நுண்ணிய நிறமற்ற திரவ வடிவிலான கிருமிநாசினிகள், வேதியியல் தன்மையை முற்றிலும் தவிர்க்கிறது. இந்த கிருமிநாசினி பயன்படுத்தும் போது கைகளில் மட்டுமல்ல சுற்றுப்புறப் பகுதிகளிலும் காற்றின் மூலம் கிருமிகள் மற்றும் வேதி பரவலை தடுக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.