தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கர்நாடகத்தில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட முதல்வர் எடியூரப்பா

கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல்வர் எடியூரப்பா புதன்கிழமை வான்வழியாகப் பார்வையிட்டார்.

News image
கர்நாடகத்தில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட முதல்வர் எடியூரப்பா
Updated On :21 அக்டோபர் 2020, 10:52 am

DIN

கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல்வர் எடியூரப்பா புதன்கிழமை வான்வழியாகப் பார்வையிட்டார்.

கடந்த சில தினங்களாக கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கலபுராகி மாவட்டத்தில் வான்வழியாக முதல்வர் எடியூரப்பா பார்வையிட்டார். 

கலபுராகி, விஜயபுரா, யாத்கீர் மற்றும் ரைச்சூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளால் பெரும்சேதத்தை சந்தித்துள்ளன. இப்பகுதிகளில் ரூ.3000 கோடி அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் இடைத்தேர்தலில் மும்முரமாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.