கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கேரளம்: 18 திருநங்கைகள் உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி

கேரளத்தில் உயர்நிலைக் கல்விக்கு இணையாக நடத்தப்பட்ட தேர்வில் 18 திருநங்கைகள் தேர்ச்சி பெற்று உயர்நிலைக் கல்வியைத் தொடர உள்ளனர்.

News image
கேரளம்: 18 திருநங்கைகள் உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி
Updated On :22 அக்டோபர் 2020, 7:15 am

DIN

திருவனந்தபுரம்: கேரளத்தில் உயர்நிலைக் கல்விக்கு இணையாக நடத்தப்பட்ட தேர்வில் 18 திருநங்கைகள் தேர்ச்சி பெற்று உயர்நிலைக் கல்வியைத் தொடர உள்ளனர்.

பள்ளி உயர்நிலைக் கல்விக்கு இணையாக கேரள மாநில எழுத்தறிவு மிஷன் ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்வில் முதன்முறையாக அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கேரளத்தில் திருநங்கை சமூகத்தினரை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கேரளத்தில் சமூக நீதித்துறை சார்பில் கேரள மாநில எழுத்தறிவு மிஷன் ஆணையத்தால் திருநங்கைகளுக்கு உயர்நிலைக் கல்விக்கு இணையான கல்வியறிவு அளித்து தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டு நடத்தப்பட்டத் தேர்வில் கொல்லம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 22 திருநங்கைகள் கலந்துகொண்டனர். இதில் 18 பேர் தேர்ச்சி பெற்று உயர்கல்விப்பெற தகுதியடைந்துள்ளனர்.

கேரளத்தில் இதுவரை 39 திருநங்கைகள் 10-ஆம் வகுப்புக்கு இணையானத் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 62 பேர் உயர்நிலைக் கல்விக்கு இணையான தேர்ச்சியை பெற்றுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.