திருவனந்தபுரம்: கேரளத்தில் உயர்நிலைக் கல்விக்கு இணையாக நடத்தப்பட்ட தேர்வில் 18 திருநங்கைகள் தேர்ச்சி பெற்று உயர்நிலைக் கல்வியைத் தொடர உள்ளனர்.
பள்ளி உயர்நிலைக் கல்விக்கு இணையாக கேரள மாநில எழுத்தறிவு மிஷன் ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்வில் முதன்முறையாக அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கேரளத்தில் திருநங்கை சமூகத்தினரை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கேரளத்தில் சமூக நீதித்துறை சார்பில் கேரள மாநில எழுத்தறிவு மிஷன் ஆணையத்தால் திருநங்கைகளுக்கு உயர்நிலைக் கல்விக்கு இணையான கல்வியறிவு அளித்து தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு நடத்தப்பட்டத் தேர்வில் கொல்லம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 22 திருநங்கைகள் கலந்துகொண்டனர். இதில் 18 பேர் தேர்ச்சி பெற்று உயர்கல்விப்பெற தகுதியடைந்துள்ளனர்.
கேரளத்தில் இதுவரை 39 திருநங்கைகள் 10-ஆம் வகுப்புக்கு இணையானத் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 62 பேர் உயர்நிலைக் கல்விக்கு இணையான தேர்ச்சியை பெற்றுள்ளனர்.