ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பிகார் தேர்தல்: பிரசாரத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி

பிகார் சட்டமன்றத் தேர்தலுக்காக  முதன்முறையாக இன்று பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
Updated On :23 அக்டோபர் 2020, 5:39 am

DIN

பிகார் சட்டமன்றத் தேர்தலுக்காக  முதன்முறையாக இன்று பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

பிகாரில் வரும் 28-ஆம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7-ஆம் தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகிறது.

இதில் முதல் கட்டமாக அக்டோபர் 28-ஆம் தேதி 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய், பிரதமருக்கு நெருக்கமான மாநிலங்களில் பிகாரும் ஒன்று. பிகாரின் சட்டமன்றத் தேர்தலையொட்டி இன்று அவர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். பிரதமர் மோடியின் நேரடிப் பிரசாரம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை எளிமையாக்கும் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.