கேரளத்தில் இன்று மேலும் 8253 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று மேலும் 8253 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

கேரளத்தில் இன்று மேலும் 8253 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கேரள மாநிலத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. ஜனவரியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்காக இருந்த நிலையில் தற்போது அது 4 லட்சத்தைத் நெருங்கியுள்ளது. நாட்டிலேயே கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்துவரும் மாநிலமாக கேரளம் மாறியுள்ளது.

இந்த நிலையில் கேரளத்தில் இன்று மேலும் 8253 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று மேலும் 8253 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 7,084 பேருக்கு தொடர்புகள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,86,088ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இன்று 25 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானோரின் மொத்த எண்ணக்கை 1,306ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,87,261 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 97,417 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com