தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உ.பி. மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்: பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையால் மக்களிடையே அச்சம் நிலவுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image

பிரியங்கா காந்தி(கோப்புப்படம்)

Updated On :26 அக்டோபர் 2020, 1:01 pm

DIN

உத்தரப்பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் மக்களிடையே அச்சம் நிலவுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஆளும் பாஜக அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தொடர்ந்து யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை குற்றஞ்சாட்டி வருகிறார். 

இந்நிலையில், இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று காலை பாக்பாத்தில் ஒரு இரும்பு வணிகர் கடத்தப்பட்டுள்ளார். உ.பி.யில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. வர்த்தகர்கள் பாதுகாப்பாக இல்லை. குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும், ஆட்சியாளர்கள் தேர்தல் கூட்டங்களில் வெறும் பொய்யுரைகளை உரைக்கின்றனர் என்றும் உபியில் சட்டம் ஒழுங்கு பிரச்னையால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.