மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

படேல் சிலையைக் காண நவம்பர் 1 வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் வருகையால் குஜராத்தில் உள்ள படேல் சிலையைக் காண சுற்றுலாப்பயணிகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

News image
படேல் சிலையக் காண நவம்பர் 1 வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
Updated On :27 அக்டோபர் 2020, 3:01 pm

DIN

வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் வருகையால் குஜராத்தில் உள்ள படேல் சிலையைக் காண சுற்றுலாப்பயணிகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில் 182 அடி உயரத்தில் சா்தாா் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது ‘ஒற்றுமை சிலை’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

கரோனா தொற்றால் பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த குஜராத் மாநிலத்தில் உள்ள படேல் சிலை அக்டோபர் 17  முதல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.

இந்நிலையில் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வல்லபாய் படேலின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். இதனையடுத்து அக்டோபர் 27 முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை படேல் சிலையைக் காண சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.