தெலங்கானாவில் மேலும் 1,481 பேருக்கு கரோனா 

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,481 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளன. 
தெலங்கானாவில் மேலும் 1,481 பேருக்கு கரோனா 
தெலங்கானாவில் மேலும் 1,481 பேருக்கு கரோனா 
Updated on
1 min read

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,481 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளன. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானா கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

புதிதாக 1,481 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.34 லட்சமாக அதிகரித்துள்ளது.

தொற்று பாதித்த 17,916 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 14,883 பேர் வீடுகளில் மற்றும் தனியார் நிறுவனங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

 இதுவரை தெலங்கானாவில் 41.55 லட்சம் சோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 27-ம் தேதி மட்டும் 40,081 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,319-ஆக அதிகரித்துள்ளது. 

தெலங்கானாவில் மீட்பு விகிதம் 91.78 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 0.56 ஆகவும் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com