கேரளத்தில் மேலும் 7,020 பேருக்குக் கரோனா பாதிப்பு

கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 7,020 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 7,020 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 7,020 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு 4,18,484 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 1,429 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை மொத்தம் 3,25,166 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 91,784 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com