ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மேற்குவங்க சட்டப் பேரவையின் துணைத்தலைவர் புற்றுநோயால் பலி

மேற்குவங்க மாநில சட்டப்பேரவையின் துணைத் தலைவரும், திரிணாமுல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான சுகுமார் ஹன்ஸ்டா புற்றுநோய் பாதிப்பால் வியாழக்கிழமை பலியானார்.

News image
மேற்குவங்க மாநில சட்டப்பேரவையின் துணைத் தலைவர் சுகுமார் ஹன்ஸ்டா
Updated On :29 அக்டோபர் 2020, 10:05 am

DIN

மேற்குவங்க மாநில சட்டப்பேரவையின் துணைத் தலைவரும், திரிணாமுல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான சுகுமார் ஹன்ஸ்டா புற்றுநோய் பாதிப்பால் வியாழக்கிழமை பலியானார்.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையின் துணைத் தலைவராக இருப்பவர் சுகுமார் ஹன்ஸ்டா. இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜார்கிராம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கு சமீபத்தில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சுகுமார் வியாழக்கிழமை பலியானார். அவருக்கு வயது 67. அவரது மறைவிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப்பதிவில், “ மேற்கு வங்க சட்டப்பேரவை துணைத் தலைவரும், ஜார்கிராம் சட்டமன்ற உறுப்பினருமான சுகுமார் ஹன்ஸ்டா காலமானதைக் கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். ” எனத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் ஹைதர் அஜீஸ் சஃப்வியின் மறைவுக்குப் பின்னர், 2018 டிசம்பரில் துணை சபாநாயகராக ஹன்ஸ்டா பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.