தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புணேவில் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 பேர் படுகாயம்

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :2 செப்டம்பர் 2020, 7:02 am

DIN

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புணேவின் கணேஷ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் காலை 7 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் அருகில் இருந்த குடியிருப்புகளின் சுகவர்கள் இடிந்து விழுந்தன.   
உடனடியாக தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இரவு முழுவதும் எரிவாயு சிலிண்டரின் கசிவு ஏற்பட்டதாகவும், மின்சார விளக்குகள் தொடர்ந்து எரிந்துகொண்டிருந்ததாலும் வெடிவிபத்து ஏற்பட்டதாக காவலர்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 4 பேர் பலத்த காயமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.