தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்(எய்ம்ஸ்) வியாழக்கிழமை முதல் புறநோயாளிகள் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
கரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில், புறநோயாளிகள் பயன்படுத்தும் படுக்கை வசதிகள் அனைத்தும் கரோனா படுக்கையாக மாற்றப்பட்டது. இதனால், புறநோயாளிகள் சேவை கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, தற்போது பொது முடக்கத்தில் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும், கரோனா தீவிரம் குறைந்துள்ளதையடுத்து, செப்டம்பர் 1 முதல் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்று மருத்துவ தலைவர் டாக்டர் ஆர்த்தி விஜ் கூறியுள்ளார்.