/

தில்லி  எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் சேவை மீண்டும் தொடக்கம்

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்(எய்ம்ஸ்) வியாழக்கிழமை முதல் புறநோயாளிகள் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. 

News image

AIIMS resumes OPD services a day after suspension

Updated On :3 செப்டம்பர் 2020, 7:36 am

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்(எய்ம்ஸ்) வியாழக்கிழமை முதல் புறநோயாளிகள் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. 

கரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில், புறநோயாளிகள் பயன்படுத்தும் படுக்கை வசதிகள் அனைத்தும் கரோனா படுக்கையாக மாற்றப்பட்டது. இதனால், புறநோயாளிகள் சேவை கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. 

இதையடுத்து, தற்போது பொது முடக்கத்தில் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும், கரோனா தீவிரம் குறைந்துள்ளதையடுத்து, செப்டம்பர் 1 முதல் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்று மருத்துவ தலைவர் டாக்டர் ஆர்த்தி விஜ் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.