/

எப்பவும் தனி வழிதான்: தனுஷ்

நடிகர் தனுஷ் பேச்சு குறித்து...

News image

நடிகர் தனுஷ்

Updated On :26 ஏப்ரல் 2026, 6:22 am

நடிகர் தனுஷ் சினிமாவில் தன் போட்டியாளர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

நடிகர் தனுஷ் இயக்குநர் விக்னேஷ் ராஜா கூட்டணியில் உண்மைச் சம்பவத்துடன் தொடர்புடைய கதையாக எடுக்கப்பட்ட திரைப்படமான கர வருகிற ஏப். 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் வெளியாவதற்கு முன்பே இதுகுறித்து நல்ல எதிர்பார்ப்பு உருவாகியிருப்பதால் முதல் நாளே பெரிய அளவில் கவனிக்கப்படும் என்றே தெரிகிறது.

இந்த நிலையில், கர திரைப்படத்திற்கான புரமோஷன் நிகழ்வு நேற்று (ஏப். 25) கோவையில் நடைபெற்றது. இதில் தனுஷ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நடிகர் தனுஷிடம், “ரஜினி - கமல், விஜய் - அஜித் என போட்டி இருந்தது. அப்படி தனுஷின் போட்டியாளர் யார்? சூர்யாவா? கார்த்தியா? ரவி மோகனா?” எனக் கேட்டார்.

இதற்கு தனுஷ், “எப்பவும் நம்ம தனி வழிதான்” என்றார். இதனைக் கேட்ட தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்து கைதட்டினர்.

Actor Dhanush has responded to a question regarding his competitors in the film industry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.