மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

லடாக்கில் ஆய்வு நடத்துகிறார் ராணுவத் தளபதி

சீனாவுடனான எல்லைப் பதட்டத்தை அடுத்து லடாக்கில் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ஆய்வு நடத்துகிறார்.

News image

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே

Updated On :3 செப்டம்பர் 2020, 6:22 am

சீனாவுடனான எல்லைப் பதட்டத்தை அடுத்து லடாக்கில் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ஆய்வு நடத்துகிறார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் கால்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து 2 நாட்டிற்கும் இடையே கடந்த மூன்று மாதங்களாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், சீன ராணுவம் கடந்த ஆகஸ்ட் 30 இரவு லடாக்கில் சுஷுல் அருகே பாங்கோங் தசோவின் தென் கரைக்கு அருகே இந்தியப் பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதை இந்திய ராணுவம் முறியடித்தது. 

இதையடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு மூத்த ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவத் தளபதி நேரில் ஆய்வு நடத்த உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.