மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கர்நாடக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழை

கர்நாடக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

கர்நாடக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

Updated On :4 செப்டம்பர் 2020, 11:35 am

கர்நாடக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மலைநாடு பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கடந்த சில நாள்காளாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நிரம்பியுள்ள அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கர்நாடக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, கர்நாடக கடலோர பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை தொடர் மழைக்கு வாய்ப்புள்ளது.

மலைநாடு பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று உத்தராகண்ட், கிழக்கு ராஜஸ்தான், அருணாசலப் பிரதேசம், மேகாலயா, அசாம், சிக்கிம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.