பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

விருப்பப்படுவோர் கரோனா பரிசோதனை செய்துகொள்ள அனுமதி: ஐசிஎம்ஆர்

பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், தேவைப்பட்டால் கரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் நெறிமுறையில் மாற்றம் செய்துள்ளது.

News image

தேவைப்பட்டால் கரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம்: ஐசிஎம்ஆர்

Updated On :5 செப்டம்பர் 2020, 9:22 am


பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், விருப்பப்பட்டால், கரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் நெறிமுறையில் மாற்றம் செய்துள்ளது.

தற்போதுவரை, கரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இனி, கரோனா பரிசோதனை செய்து கொள்ள விரும்புவோர் யார் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ள அனுமதிக்கும்படி ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் நெறிமுறையில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. 

கரோனா பரிசோதனை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில் சில மாற்றங்களை செய்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் வெள்ளிக்கிழமை மாலை புதிய அறிக்கையை வெளியிட்டது.

அந்த புதிய வழிகாட்டு நெறிமுறையில், நாட்டை விட்டு நாடு செல்லுதல் அல்லது மாநிலங்களில் இருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்வோர், அதன் நுழைவு வாயிலில், கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் அளிப்பதை கட்டாயமாக்கலாம் என்று தேசிய கரோனா பேரிடர் குழு வலியுறுத்துகிறது.

அதே வேளையில், பொதுமக்களில், கரோனா பரிசோதனை செய்து கொள்ள யார் விரும்பினாலும், தேவைப்பட்டாலும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். 

பொதுவாக தனியார் மருத்துவமனைகளில் யார் வேண்டுமானாலும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டாலும், பொதுவாக கரோனா அறிகுறி இருப்பவர்கள் தான் கரோனா பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

மேலும், பிரசவங்கள் போன்ற அவசரகால சிகிச்சைகள் எதுவும் கரோனா பரிசோதனைக்காக தாமதப்படுத்தக் கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் இருக்கும் நபர்கள், அறிகுறி இல்லாமல் இருந்தாலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இதர நோய்கள் இருப்பவர்களாக இருப்பின் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.