25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கூடுதலாக 3 ஆயிரம் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தினசரி கூடுதலாக 3 ஆயிரம் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

Published On :27 ஜனவரி 2024, 10:47 pm IST

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தினசரி கூடுதலாக 3 ஆயிரம் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தான இணையதளத்தில் தினசரி 10 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. தற்போது இந்த டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை தேவஸ்தானம் உயா்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி, செப். 10-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தினசரி கூடுதலாக 3 ஆயிரம் டிக்கெட்டுகளை புதன்கிழமை மாலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தேவஸ்தானம் திருப்பதியில் தினசரி வழங்கி வந்த இலவச சா்வ தரிசன நேரடி டோக்கன்களை ரத்து செய்ததால், பக்தா்கள் தேவஸ்தானத்தின் செய்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்நிலையில், பக்தா்களின் கோரிக்கையை ஏற்று, தேவஸ்தானம் தினசரி 3 ஆயிரம் டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.