டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டார்.

News image
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
Updated On :27 ஜனவரி 2024, 5:17 pm

DIN

கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவு குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டிற்காக ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம் மேற்கொண்டார்.

இதில் இன்று (வியாழக்கிழமை) கிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரையும், தஜிகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்து பேசினார். இதில் பரஸ்பர ஆர்வம், இருநாட்டு உறவுகள், நட்புறவு மேம்பாடு குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

கிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பு குறித்து சுட்டுரையில் அமைச்சர் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளதாவது, ''கிரிகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சிங்கிஸ் ஐதர்பெகோவ் உடனான சந்திப்பு இனிமையானதாக அமைந்தது. 

கரோனா பெருந்தொற்று சூழலில் இந்திய மாணவர்கள் நாடு திரும்புவதற்கு உதவிகரமாக இருந்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள், பிராந்திய  ஒற்றுமை குறித்து விவாதம் நடைபெற்றது. அனைத்துத்துறைகளிலும் கூட்டு முயற்சி மேம்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது'' என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று தஜிகிஸ்தான் அமைச்சருடனான சந்திப்பு குறித்தும் அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவட் பதிவிட்டுள்ளதாவது, ''தஜிகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முஹ்ரிதீன் உடனான சந்திப்பு சுமூகமாக அமைந்தது. இதில் இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பில் உள்ள வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது'' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.