/

ஒடிசாவில் புதிதாக 3,991 பேருக்கு கரோனா பாதிப்பு

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,991 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 1,39,121 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image

Odisha records highest single-day spike of 3,991 Covid-19 cases

Updated On :10 செப்டம்பர் 2020, 7:14 am

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,991 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 1,39,121 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் தொற்று பாதிப்பு கடந்த சில நாள்களாக மேலும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 591 ஆக உயர்ந்துள்ளது. 

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில், 2,315 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்தும், 1,676 பேர் உள்ளூரிலும் பதிவாகியுள்ளது. 

இதன் மூலம், ஒடிசாவில் மருத்துவமனை சிகிச்சையில் 33,182 பேரும், 1,05,295 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.