மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பிகார்: தேர்வு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பிகாரில் உரிய நேரத்தில் தேர்வு வைக்க வலியுறுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
பிகாரில் உரிய நேரத்தில் தேர்வு நடத்த வலியுறுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated On :11 செப்டம்பர் 2020, 12:27 pm

DIN

பிகாரில் உரிய நேரத்தில் தேர்வு நடத்த வலியுறுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளும் மூடப்பட்டு மாநிலங்களில் உள்ள கரோனா தொற்று பரவலுக்கு ஏற்ப தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பிகாரில் காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் பருவத்தேர்வை வைக்க வலியுறுத்தி இறுதியாண்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டேவின் இல்லத்தை முற்றுகையிட்ட மாணவிகள், உரிய நேரத்தில் தேர்வு வைக்க வேண்டும் என்றும், தேர்வு முடிவுகளையும் குறிப்பிட்ட காலத்தில் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தேர்வு வைத்தால் மட்டுமே காலியாக உள்ள 4000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலும் என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.