மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிகார்: தேர்வு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பிகாரில் உரிய நேரத்தில் தேர்வு வைக்க வலியுறுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

பிகாரில் உரிய நேரத்தில் தேர்வு நடத்த வலியுறுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :11 செப்டம்பர் 2020, 12:27 pm

பிகாரில் உரிய நேரத்தில் தேர்வு நடத்த வலியுறுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளும் மூடப்பட்டு மாநிலங்களில் உள்ள கரோனா தொற்று பரவலுக்கு ஏற்ப தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பிகாரில் காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் பருவத்தேர்வை வைக்க வலியுறுத்தி இறுதியாண்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டேவின் இல்லத்தை முற்றுகையிட்ட மாணவிகள், உரிய நேரத்தில் தேர்வு வைக்க வேண்டும் என்றும், தேர்வு முடிவுகளையும் குறிப்பிட்ட காலத்தில் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தேர்வு வைத்தால் மட்டுமே காலியாக உள்ள 4000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலும் என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.