பிகாரில் உரிய நேரத்தில் தேர்வு நடத்த வலியுறுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளும் மூடப்பட்டு மாநிலங்களில் உள்ள கரோனா தொற்று பரவலுக்கு ஏற்ப தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பிகாரில் காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் பருவத்தேர்வை வைக்க வலியுறுத்தி இறுதியாண்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டேவின் இல்லத்தை முற்றுகையிட்ட மாணவிகள், உரிய நேரத்தில் தேர்வு வைக்க வேண்டும் என்றும், தேர்வு முடிவுகளையும் குறிப்பிட்ட காலத்தில் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தேர்வு வைத்தால் மட்டுமே காலியாக உள்ள 4000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலும் என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் வெளியீட்டுத் தேதி!
காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல்!
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

