மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெள்ள பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.300 கோடி மதிப்பிலான நிவாரணம் அறிவித்த ஒடிசா முதல்வர்

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநில விவசாயிகளுக்கு ரூ.300 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை முதல்வர் நவீன் பட்நாயக் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

News image
வெள்ள பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.300 கோடி மதிப்பிலான நிவாரணம் அறிவித்த ஒடிசா முதல்வர்
Updated On :11 செப்டம்பர் 2020, 2:09 pm

DIN

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநில விவசாயிகளுக்கு ரூ.300 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை முதல்வர் நவீன் பட்நாயக் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

ஒடிசா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த இடைவிடாத மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளமும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தின. இதனால்  விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ரூ.300 கோடி மதிப்பிலான நிவாரண உதவியை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார். அதன்படி ரூ .6,800 க்கு மேல் பயிர் இழப்பைச் சந்தித்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு விவசாய மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உறுதி செய்யப்பட்ட நீர்ப்பாசனத்தின் கீழ் உள்ள பகுதிகளில் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு ரூ .13,500 மற்றும் அனைத்து வகையான வற்றாத பயிர்களுக்கும் ஹெக்டேருக்கு ரூ.18,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை உள்ளிட்ட ரபி பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக விதை சுத்திகரிப்பு இரசாயனங்கள் / உயிர் பூச்சிக்கொல்லிகளை இலவசமாக வழங்கி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விதை சுத்திகரிப்பு திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சான்றளிக்கப்பட்ட தரமான விதைகளுக்கு 75 சதவீதம் அதிக மானியத்துடன் விவசாயிகளுக்கு சிறப்பு உதவி வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.