ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கேரளம்: மன அழுத்தத்தால் சுகாதாரப் பணியாளர் தற்கொலை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சுகாதாரப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :11 செப்டம்பர் 2020, 12:53 pm

DIN

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சுகாதாரப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த இருவர் கொடுத்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக சுகாதாரப் பணியாளர் எழுதிவைத்த கடிதத்தை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவனந்தபுரம் அருகே உதயகுளங்கரை பகுதியில் உள்ள பழைய கட்டடம் ஒன்றில் 45 வயது மதிக்கத்தக்க பெண் சுகாதாரப் பணியாளர் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டறியப்பட்டார்.

மேலும் சுகாதாரப் பணியாளர் இறந்த இடத்தில் அவர் கைப்பட எழுதிய கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இருவர் கொடுத்த மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளரிடம் கேட்டபோது, இது குறித்து எந்தவித புகாரும் வரவில்லை என்றும், எனினும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.