பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஆயுதங்களைக் கைப்பற்றிய எல்லை பாதுகாப்புப் படையினர்

பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

News image
கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள்
Updated On :12 செப்டம்பர் 2020, 10:21 am

DIN

பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ளஃபெரோஸ்பூர் மாவட்டம் இந்திய நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ளது. பாகிஸ்தான் நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இப்பகுதியில் எல்லைப்பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை காலை திடீர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது 6 ஏகே-47 ரக துப்பாக்கிகள்,4 எம்-16 ரக துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், வெடிபொருட்கள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர். சர்வதேச எல்லையான அபோஹார் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.