மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஆயுதங்களைக் கைப்பற்றிய எல்லை பாதுகாப்புப் படையினர்

பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

News image

கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள்

Updated On :12 செப்டம்பர் 2020, 10:21 am

பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ளஃபெரோஸ்பூர் மாவட்டம் இந்திய நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ளது. பாகிஸ்தான் நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இப்பகுதியில் எல்லைப்பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை காலை திடீர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது 6 ஏகே-47 ரக துப்பாக்கிகள்,4 எம்-16 ரக துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், வெடிபொருட்கள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர். சர்வதேச எல்லையான அபோஹார் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.