கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புதிய கல்விக் கொள்கை, ஜிஎஸ்டி, பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தலைவர்களுடன் மத்திய அரசு இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தியது.

News image

கோப்புப்படம்

Updated On :16 செப்டம்பர் 2020, 4:58 pm

DIN


புதிய கல்விக் கொள்கை, ஜிஎஸ்டி, பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தலைவர்களுடன் மத்திய அரசு இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தியது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மாநிலங்களவையின் எதிர்க்கட்சிகள் தலைவர்களுடனான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, தாவர்சந்த் கெலாட், பியூஷ் கோயல் மற்றும் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸிலிருந்து குலாம் நபி ஆசாத் மற்றும் ஆனந்த் சர்மா, திரிணமூல் காங்கிரஸிலிருந்து டெரிக் ஓ பிரையன், டிஆர்ஸ் கட்சியிலிருந்து கே. கேசவ ராவ் மற்றும் திமுகவிலிருந்து திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

மாநிலங்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜிஎஸ்டி விவகாரம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவுள்ள மசோதாக்கள் பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. 

இவை பற்றி எதிர்க்கட்சிகள் மத்தியில் அரசுத் தரப்பில் புரிதலை ஏற்படுத்த முயற்சிப்பதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் திருப்தியடையவில்லை எனத் தெரிகிறது. இருந்தபோதிலும், கூட்டம் சுமுகமாக நிறைவடைந்ததாகவும் மீண்டும் அடுத்தகட்ட ஆலோசனை நடைபெறும் என்றும் பாஜக தலைவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.