சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வேலைவாய்ப்பின்மை: ம.பி.யில் பக்கோடா போடும் போராட்டம்

நாட்டில் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து மத்தியப்பிரதேசத்தில் பக்கோடா போடும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர்.

News image
நாட்டில் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து மத்தியப்பிரதேசத்தில் பக்கோடா போடும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர்.
Updated On :17 செப்டம்பர் 2020, 9:53 am

DIN

நாட்டில் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து மத்தியப்பிரதேசத்தில் பக்கோடா போடும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று (வியாழக்கிழமை) வேலைவாய்ப்பின்மை தினமாக அனுசரித்து பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலைவாய்ப்பின்மையை கண்டித்து கடந்த சில நாள்களாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட பலர் குரல்கொடுத்து வருகின்றனர். 

இதனிடையே பிரதமர் மோடியின் பிறந்தநாள் தினத்தை வேலைவாய்ப்பின்மை தினமாக அனுசரித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனிடையே வேலைவாய்ப்பின்மை, ஊழல், பணவீக்கம் உள்ளிட்டவற்றை கண்டித்து பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் பக்கோடா வறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பின்மையை கண்டித்து பக்கோடா வறுத்தனர்.

இன்று (புதன்கிழமை) காலை பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்த காங்கிரஸ்  எம்.பி.ராகுல்காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, ''நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மையால் இன்றைய தினத்தை வேலைவாய்ப்பின்மை தினமாக இளைஞர்கள் கடைப்பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பின்மையே கண்ணியம். ஆனால் எத்தனை நாள்களுக்கு இந்த அரசாங்கம் இதனை நிறைவேற்றாமல் இருக்கும்?'' என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.