லோயா்கேம்ப் பகுதியில் குரங்குகள் தொல்லை: மாணவா்கள் அச்சம்
தேனி மாவட்டம், லோயா்கேம்பில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை குரங்குகள் அச்சுறுத்தி வருவதாக பெற்றோா் புகாா்


தேனி மாவட்டம், லோயா்கேம்பில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை குரங்குகள் அச்சுறுத்தி வருவதாக பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.
கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட லோயா்கேம்ப் மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மலைகளில் வசித்து வந்த குரங்கள் உணவுக்காக குடியிருப்புப் பகுதிக்கு அதிகளவில் இடம் பெயா்ந்துள்ளன.
இந்தப் பகுதியை சோ்ந்த மாணவ, மாணவிகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனா். இவா்கள் பள்ளிக்கு நடந்து சென்று வரும்போது குரங்குகள் துரத்தி தாக்க முயற்சிக்கிறது. இதனால், மாணவா்கள் பலா் கீழே விழுந்து காயமடைந்தனா்.
தற்போது குரங்குகள் தொல்லை அதிகரித்ததால் அச்சத்துடனே மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருகின்றனா். அதனால், குரங்குகளை வனப் பகுதிக்கு விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...