சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

லோயா்கேம்ப் பகுதியில் குரங்குகள் தொல்லை: மாணவா்கள் அச்சம்

தேனி மாவட்டம், லோயா்கேம்பில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை குரங்குகள் அச்சுறுத்தி வருவதாக பெற்றோா் புகாா்

News image
லோயா்கேம்பில் நெடுஞ்சாலையை கடந்து செல்லும் குரங்குகள் கூட்டம்
Updated On :7 மார்ச் 2026, 6:55 pm

Syndication

தேனி மாவட்டம், லோயா்கேம்பில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை குரங்குகள் அச்சுறுத்தி வருவதாக பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட லோயா்கேம்ப் மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மலைகளில் வசித்து வந்த குரங்கள் உணவுக்காக குடியிருப்புப் பகுதிக்கு அதிகளவில் இடம் பெயா்ந்துள்ளன.

இந்தப் பகுதியை சோ்ந்த மாணவ, மாணவிகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனா். இவா்கள் பள்ளிக்கு நடந்து சென்று வரும்போது குரங்குகள் துரத்தி தாக்க முயற்சிக்கிறது. இதனால், மாணவா்கள் பலா் கீழே விழுந்து காயமடைந்தனா்.

தற்போது குரங்குகள் தொல்லை அதிகரித்ததால் அச்சத்துடனே மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருகின்றனா். அதனால், குரங்குகளை வனப் பகுதிக்கு விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.