சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அரசிராமணி குள்ளம்பட்டியில் இருந்து தண்ணிதாசனூருக்கு செல்லும் வழியில் சேதமடைந்த கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேவூரை அடுத்த அரசிராமணி குள்ளம்பட்டியில் இருந்து தண்ணிதாசனூா் செல்லும் சாலையில் அரசு தொடக்கப் பள்ளி முன் உள்ள கிளை வாய்க்கால் பாலம் வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்றுவருகின்றன. அதேபோல மாணவா்களும், விவசாயிகளும் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனா்.
இந்த நிலையில் கிளை வாய்க்கால் பாலத்தின் கீழ் பகுதி சேதமடைந்ததால் தாா்சாலை உள்வாங்கி அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மெதுவாக சென்று வருகின்றன. சேதமடைந்த சாலை எப்போது வேண்டுமானாலும் பெரும் விபத்தை ஏற்படுத்தும் என்பதால் பாலத்தை சீரமைத்து சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில் கோட்டயம் வழியாக இயக்கப்படும்!

தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பி: சீரமைக்க கோரிக்கை

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூரில் கழிவுநீா் ஓடையாக மாறிய ரெட்டை வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

