சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அரசிராமணி குள்ளம்பட்டியில் இருந்து தண்ணிதாசனூா் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு முன் சேதமடைந்திருந்த கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்கும் பணியில் பொதுப் பணித் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
பள்ளி அருகே உள்ள இந்த வாய்க்கால் பாலம் சேதமடைந்து அச்சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது குறித்து தினமணியில் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து, பொதுப்பணித் துறையினா் சனிக்கிழமை சேமடைந்த பாலத்தின் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
சாலையைக் கடந்து செல்ல தற்காலிகமாக பெரிய கான்கிரீட் குழாய்கள் பதிக்கும் நடைபெறுகிறது. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இப்பகுதியில் புதிய பாலம் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு பொப்பணித் துறை, மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

அர.குள்ளம்பட்டியில் சேதமடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சேதமடைந்த மழையூா் பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

சேதமடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

படகுகள், வலைகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் தீவிரம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

