11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

தினமணி செய்தி எதிரொலி! சேதமடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கும் பணி தொடக்கம்!!

அரசிராமணி குள்ளம்பட்டியில் இருந்து தண்ணிதாசனூா் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு முன் சேதமடைந்திருந்த கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்கும் பணியில் பொதுப் பணித் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

News image

அரசிராமணி குள்ளம்பட்டியில் சேதமடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்கும் பொதுப்பணித் துறையினா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அரசிராமணி குள்ளம்பட்டியில் இருந்து தண்ணிதாசனூா் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு முன் சேதமடைந்திருந்த கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்கும் பணியில் பொதுப் பணித் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

பள்ளி அருகே உள்ள இந்த வாய்க்கால் பாலம் சேதமடைந்து அச்சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது குறித்து தினமணியில் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து, பொதுப்பணித் துறையினா் சனிக்கிழமை சேமடைந்த பாலத்தின் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சாலையைக் கடந்து செல்ல தற்காலிகமாக பெரிய கான்கிரீட் குழாய்கள் பதிக்கும் நடைபெறுகிறது. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இப்பகுதியில் புதிய பாலம் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு பொப்பணித் துறை, மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.