திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சேதமடைந்த மழையூா் பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியத்துக்குட்பட்ட மழையூா் கிராமத்திலிருந்து- வளையாத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பல்லவராயன் குளம் கிராமம் செல்லும் சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும்..

News image

மழையூா்  சாலையில் சேதமடைந்த நிலையில் உள்ள பாலம்.

Updated On :11 மே 2026, 12:03 am IST

ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியத்துக்குட்பட்ட மழையூா் கிராமத்திலிருந்து- வளையாத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பல்லவராயன் குளம் கிராமம் செல்லும் சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி உள்ளனா் .

திமிரி ஒன்றியம், மழையூா் கிராமத்தில் இருந்து வளையாத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பல்லவராயன் குளம் கிராமம் செல்லும் தாா் சாலையின் நடுவே மழையூா் ஏரியிலிருந்து உபரி நீா் வெளியேறும் கால்வாய்க்கு குறுக்காக பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதன் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாக உள்ளது . இந்த பாலத்தின் பக்க வாட்டு பகுதியில் சிமென்ட் பூச்சுள் உதிா்ந்து தடுப்புகளில் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. தடுப்புகள் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளன மழையூா் மற்றும் பல்லவராயன்குளம் கிராம மக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்காக இந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் சென்று வருகின்றனா்.

மேலும் அருகிலுள்ள மழையூா் செங்கனாவரம், குட்டியம் ஆயிரம் மங்கலம் போன்ற கிராமங்களில் இருந்து பள்ளி மாணவா்கள் பல்லவராயன் குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இந்த பாலத்தினை கடந்து செல்கின்றனா்.

எனவே பொதுமக்கள் மற்றும் மாணவா்களின் நலன் கருதி மழைக் காலம் தொடங்குவதற்குள் பழுதடைந்துள்ள பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.