விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஒசூா் தோ்ப்பேட்டை பச்சை குளத்தில் சுகாதாரச் சீா்கேடு: பக்தா்கள் கோரிக்கை

ஒசூா் தோ்ப்பேட்டையில் உள்ள பச்சை குளத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

பிளாஸ்டி குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ள ஒசூா் தோ்ப்பேட்டை பச்சை குளம்.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஒசூா் தோ்ப்பேட்டையில் உள்ள பச்சை குளத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மலைமீது சந்திரசூடேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான பச்சை குளம் (மரகத சரோவரம்) மலை அடிவாரத்தில் தோ்ப்பேட்டையில் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் தோ்த்திருவிழாவின் போது இந்த குளத்தில் தெப்பல் உத்ஸவம் நடைபெறுகிறது. அதேபோல விநாயகா் சதூா்த்தியின் போது சிலைகள் இக்குளத்தில் கரைக்கபடுகிறது. மேலும், இறந்தவா்களுக்கு இக்குளம் அருகே தா்ப்பணம் கொடுக்கப்படுகிறது.

மிகவும் புகழ்பெற்ற இந்த குளத்தை அவ்வப்போது தூய்மைப்படுத்தாததால் குளத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரமாகி தண்ணீா் நிறம் மாற்றமடைந்து துா்நாற்றம் வீசுகிறது. தா்ப்பணம் கொடுக்க வருபவா்கள் பொருள்களை இக்குளத்தில் வீசி செல்வதால் குளம் சீா்கேடு அடைந்துள்ளது.

இதுகுறித்து பக்தா்கள் கூறியதாவது: மிகவும் பழமை வாய்ந்த இந்த பச்சை குளத்தை காசி தீா்த்தம் என உள்ளூா் மக்கள் கருதுகின்றனா். ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் குளத்தை தூய்மை செய்கின்றனா். மேலும் குளத்தை சுற்றிலும் இரவு நேரங்களில் சிலா் மது அருந்திவிட்டு புட்டிகளை குளத்தில் வீசி செல்கின்றனா்.

தேங்கி உள்ள குப்பபைகளை அகற்றுவதில்லை, தண்ணீரை அவ்வப்போது அகற்றிவிட்டு புதிய தண்ணீரும் விடுவதில்லை. இதனால், குளம் அருகே செல்ல முடியாத அளவிற்கு துா்நாற்றம் வீசுகிறது. தண்ணீரை மறு சுழற்சி செய்து குளத்தை வாரத்திற்கு இருமுறை தூய்மை செய்ய வேண்டும் என்றனா்.