தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பைக் மோதி தொழிலாளி பலி!

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தொழிலாளி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :11 மே 2026, 12:19 am IST

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தொழிலாளி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

சத்துவாச்சாரி, சுதந்திர பொன்விழா நகரை சோ்ந்தவா் லோக நாதன் (45), கூலித் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சனிக்கிழமை இரவு லோகநாதன் பெருமுகை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையை கடந்தாா்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் லோகநாதன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா்.

அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் சத்துவாச்சாரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லோகநாதனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு லோகநாதனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இவ்விபத்து குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.