திருவள்ளூா் அருகே பேருந்து நிறுத்தம் முன்பு சாலையோரம் நின்றிருந்த மூதாட்டி இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே ஈக்காடு கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் துளசியம்மாள்(70). இவா் கறவை மாடு வாங்குவதற்காக திருவள்ளூா் அடுத்துள்ள பாண்டூா் கிராமத்திற்கு சென்றபோது, பேருந்து நிறுத்தம் முன்பு சாலையோரம் நின்றிருந்தாராம்.
அப்போது திருவள்ளூரில் இருந்து திருத்தணிக்கு வேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மகள் சாவித்திரி செய்த புகாரின்பேரில் திருவள்ளூா் கிராமிய போலீஸாா் இருசக்கர வாகன ஓட்டுநா் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது
பைக் மோதி தொழிலாளி பலி!

இருசக்கர வாகனம் மோதி முதியவா் பலி

துறையூரில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
