தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

எல்லை அத்துமீறலை கைவிடாவிட்டால்: சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

சர்வதேச எல்லையில் அத்துமீறல் முயற்சிகளை கைவிடாவிட்டால் எத்தனை வலிமையான எத்தனை பெரிய நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியா தயங்காது என்று சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News image
எல்லை அத்துமீறலை கைவிடாவிட்டால்: சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
Updated On :17 செப்டம்பர் 2020, 7:48 am

ANI


புது தில்லி: சர்வதேச எல்லையில் அத்துமீறல் முயற்சிகளை கைவிடாவிட்டால் எத்தனை வலிமையான எத்தனை பெரிய நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியா தயங்காது என்று சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா - சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீனா செயல்பட்டால் எல்லையில் அமைதியை தொடர்ந்து  நிலைநாட்ட முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் சீனாவின் ஆக்ரமிப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி தரப்படும். நமது மண்ணை யாரையும் ஆக்ரமிக்க விடமாட்டோம் எனக் கூறியுள்ளார்.

அருணாச்சலில் 90 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை சொந்தம் கொண்டாட சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. லடாக்கில் 38 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா சட்டவிரோதமாக ஆக்ரமித்துள்ளது. 

கடந்த பல ஆண்டுகளாகவே, சர்வதேச எல்லைப் பகுதியில் சீனா பல கட்டடமைப்புகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. நமது அரசும் தற்போது எல்லைப் பகுதியில் கட்டமைப்புகளை மேம்படுத்த முன்பு ஒதுக்கப்பட்ட நிதியை விட இரண்டு மடங்கு கூடுதல் தொகையை ஒதுக்கி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

எல்லைப் பகுதியில் தற்போது பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ஆனால், தொடர்ந்து அமைதியை நிலைநாட்டவே நாம் முயன்று வருகிறோம், அதேவேளை, எந்த சவலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம் என்றும் ராஜ்நாத் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.