நாட்டில் கரோனா இறப்பு விகிதத்தை குறைப்பதே மத்திய அரசின் நோக்கம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். தற்போது இறப்பு விகிதம் 1.64 சதவிகிதமாக இருப்பதாகவும் அவர்கூறினார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், ''நாட்டில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 78-79 சதவிகிதமாக உள்ளது.
நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு 50 லட்சத்தை கடந்தாலும், 20 சதவிகிதத்திற்கும் குறைவான நபர்களே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா பெருந்தொற்றால் இந்தியாவில் நிகழும் உயிரிழப்புகள் ஐரோப்பா நாடுகளை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. மேலும் கரோனா பரிசோதனைகளில் அமெரிக்காவை மிஞ்சும் என்று தீர்மானமாகக் கூறினார்.
கரோனா இறப்பு விகிதம் தற்போது 1.64 சதவிகிதமாக இருக்கிறது. இதனை விரைவில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக குறைப்பதே நோக்கம்'' இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

