தில்லியில் கரோனா பரிசோதனை 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ''தில்லியில் நேற்றைய (புதன்கிழமை) நிலவரப்படி புதிதாக 4,473 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் 62,553 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விகிதம் 7.15 சதவிகிதமாக இருந்தது.
கரோனா இறப்பு விகிதம் கடந்த 10 நாள்களில் 0.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக 14,521 படுக்கைகள் உள்ளன. இதில் பாதியளவு படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன.
கரோனா பரிசோதனையை இரண்டு மடங்காக்கிய நிலையில் தற்போது நான்கு மடங்காக்கப்படுகிறது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரை எளிதில் கண்டறிந்து அப்பகுதியை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து கண்காணிக்க இயலும். இதன்மூலம் அடுத்த 10- 15 நாள்களுக்கு கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது'' இவ்வாறு அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


