ஜார்கண்ட்: ரயில்வே ஆய்வு வாகனம் மோதி யானை பலி

ஜார்கண்டில் ரயில்வே ஆய்வு வாகனம் மோதிய விபத்தில் காட்டு யானை உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஜார்கண்டில் ரயில்வே ஆய்வு வாகனம் மோதிய விபத்தில் காட்டு யானை உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் சைபாசா மாவட்டத்தில் உள்ள சிங்பும் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வந்த ரயில்வே ஆய்வு வாகனம் காட்டுயானை மீது மோதி விபத்துக்குள்ளானது.

சரந்தா காட்டுப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில் ரயில்வே ஆய்வு வாகனம்  அதிவேகத்தில் சென்றதே விபத்துக்கு காரணம் என்று மண்டல வனத்துறை அலுவலர் ராஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட 40 கிலோ மீட்டர் வேகத்தை விட அதிக வேகத்தில் ரயில்வே ஆய்வு வாகனம் சென்று யானை மீது மோதியதால், காட்டு யானை உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், உடற்கூறு ஆய்வுக்கு பிறகு யானை புதைக்கப்படும் என்றும் மண்டல வனத்துறை அலுவலர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com