ஆந்திரம், கர்நாடகத்தில் தலா 8 ஆயிரத்துக்கும் மேல் புதிதாக பாதிப்பு

ஆந்திரத்தில் 8,218 பேருக்கும், கர்நாடகத்தில் 8,364 பேருக்கும் புதிதாக கரோனா தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆந்திரத்தில் 8,218 பேருக்கும், கர்நாடகத்தில் 8,364 பேருக்கும் புதிதாக கரோனா தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரம்:

ஆந்திரத்தில் புதிதாக 8,218 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,17,776 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,30,711 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,302 பேர் பலியாகியுள்ளனர். 81,763 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் மேலும் 8,364 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 10,815 பேர் குணமடைந்துள்ளனர், 114 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,11,346 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4,04,841 பேர் குணமடைந்துள்ளனர், 7,922 பேர் பலியாகியுள்ளனர். 98,564 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com