மகாராஷ்டிர மாநிலம் புணேவில் நேற்று ஒரே நாளில் அதிக அளவாக 4,093 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 85 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது.
இதனிடையே மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் ''அதிக அளவாக புணேவில் நேற்று 4,093 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,44,516-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 85 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,536-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டுள்ளோரில் புணே மாநகராட்சியில் மட்டும் 1,893 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அருகில் உள்ள தொழிற்பேட்டையான பிம்ரி சின்ச்வாட் பகுதியில் 843 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மொத்த பாதிப்பு 68,493-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் புணே அருகில் உள்ள கிராமப்புற பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,654-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


